25.2.11

தமிழ்நாட்டைத் தமிழன் ஆள வேண்டும்


தமிழ் இனம் அழியாமல் பாதுகாக்கப்படத் தமிழ்நாட்டைத் தமிழர் ஆள வேண்டும்.  வேறு மாநிலத்திலிருந்து தமிழ் நாட்டில் குடியேறியவர்களால் தமிழனுடைய உணர்வைப் புரிந்து கொள்ளுதல் கடினமான ஒன்று ஆகும்.

அதே நேரத்தில் ஒன்றுபட்ட இந்தியாவில் வாழும் நாம், தமிழர் அல்லாதவர்களை வெறுக்க வேண்டிய தேவை இல்லை.  தமிழ் இனத்தின் பாதுகாப்பை முன்னிட்டு தமிழரல்லாதவர் தமிழ் நாட்டில் வாழலாம்; ஆனால் தமிழனை ஆள நினைக்கக்கூடாது.  அந்தந்த மாநிலத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆள வேண்டும் என நினைப்பது இயல்பான ஒன்றேயாகும்.  இந்த உணர்வை மற்றவர்கள் மதிக்க வேண்டும்.  அவ்வாறு மதிக்கும்பொழுது மட்டுமே இந்திய ஒற்றுமையுணர்வு நிலை நிற்கும்.  இதற்குரிய திட்டங்கள் தீட்டப்பட்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும்.

சாளுக்கிய அரசனான முதற்குலோத்துங்கச் சோழன் முதல், தமிழர்கள் தமிழரல்லாத அந்நியர்களால் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் ஆளப்பட்டமையால் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன.  இதனை மீட்டுருவாக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.  இந்தத் தருணத்தையும் இழந்துவிட்டால் தமிழ் இனமும் தமிழ் இனத்தின் சிறப்புகள் அனைத்தும் முற்றாக அழியும் நிலை வந்து விடும்.  அந்நிலையைத் தடுத்து நிறுத்தி ஆக வேண்டும்.

தாய்த்தமிழகம் தலை நிமிர்ந்து நின்றால் தான் இலங்கைத் தமிழினம் உட்பட உலகத் தமிழினத்துக்குப் பாதுகாப்பாக இது விளங்க இயலும்.  தாய்த் தமிழகம் அடிமைப்பட்டுக் கிடக்குமானால், உலகத் தமிழ் இனம் முழுவதும் கேட்பாரற்று நசுங்கி அழியும் நிலையை அடையும்.  அத்துடன் இலங்கையில் இனித் தமிழ் இனமும் சிங்கள இனமும் இணைந்து வாழ்தல் இயலாது.  அடிமைப்பட்டு வாழ விரும்பாத தமிழர்கள் அழிக்கப்படுவது இயல்பு.  இதனால் இலங்கையின் நிலையான அமைதிக்குத் தமிழ் ஈழம் தவிர வேறு வழி இல்லை. 

விடுதலைப்புலிகள் தமிழ் ஈழத்திற்காகப் போராடினார்கள்.  வெற்றி பெற இயலவில்லை.  இனி தாய்த்தமிழகத்தின் துணை இல்லாமல் தமிழ் ஈழம் மலர முடியாது.

அப்படியானால் இலங்கையில் தமிழ் ஈழம் மலரத் தாய்த்தமிழகம் செய்ய வேண்டியது என்ன?
-       அடுத்த பதிவில் பார்ப்போம். 

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.)
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment