6.2.11

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட வரலாற்றுப் பின்னணி என்ன?


அழித்தது யார்?
இதிலென்ன சந்தேகம்?  சிங்களர்கள் தாமே!

அழித்தது சிங்களர்கள் என்பது பொதுவான எண்ணம்.  சிங்களர்கள் மட்டுமே தனித்து நின்று அழித்தார்களா?  சிங்களர்களுக்குத் துணையாக மற்றவர்கள் செயல்படவில்லையா?

சிங்களர்களுக்குத் துணையாக இந்தியா செயல்பட்டது என்பது உண்மை.  “இந்தியா” என்பது ஒரு நாடு.  இந்தியாவிலும் தமிழ் இனம் இருக்கிறது.  இந்தியாவிலுள்ள தமிழ் இனம் இலங்கையிலுள்ள தமிழ் இனத்திற்கு எதிராகச் செயல்பட்டது என்பது தவறு.  ஆகவே, இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்தியா செயல்பட்டது என்றால் இந்தியாவிலுள்ள எந்த இன மக்கள் ஈழத் தமிழ் இன மக்களுக்கு எதிராகச் செயல்பட்டார்கள் என்னும் கேள்வி எழுகின்றது.


இந்தியாவிலுள்ள மக்களை வரலாற்று ஆசிரியர்கள் இரண்டு இனங்களாகப் பிரிக்கின்றார்கள்.
  • ஆரிய இனம்
  • திராவிட இனம்

ஆரிய இனத்திற்குத் தலைமை தாங்குபவர்கள் பிராமணர்கள்; திராவிட இனத்திற்குத் தலைமையாகக் கருதப்படுபவர்கள் தமிழர்கள்.  “தமிழர்” என்னும் தமிழ்ப்பெயரே சமற்கிருதத்தில் “திராவிடர்” என்று குறிக்கப்படுகிறது. 

ஆகவே, “ஆரியர்களுக்கு எதிரான திராவிடர்கள்” என்பது தமிழ் இனத்தையே குறிக்கிறது.  இதனால் தமிழ் இனம் என்னும் திராவிட இனத்தை இழிவுபடுத்துவதும் அழிப்பதும் திராவிட இனத்திற்கு எதிரான ஆரியர்களுக்குத் தலைமை தாங்கும் பிராமணர்களின் கடமையாக இருக்கிறது.  தமிழ் இனத்தை இழிவுபடுத்துவதும் அழிப்பதும் ஆரியப் பிராமணர்களின் கடமையாய் இருக்கிறது என்பது வரலாறு கூறும் உண்மை.

துணை போனவர்கள்
இந்த வரலாற்று உண்மையின்படி இலங்கையில் நடைபெற்ற தமிழ் இன அழிப்பு இந்தியப் பிராமணர்களின் துணையோடு நடைபெற்றது என்பது இயல்பான ஒன்றாகும்.  அந்த இயல்பின்படியே இந்திய ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் பிராமணர்கள் செயல்பட்டார்கள் என்பதை நாம் கண்டோம். 

மேலும் சிங்களர்கள் ஆரிய இனத்தினர் என்பது இந்திய ஆரியப் பிராமணர்களின் நம்பிக்கை.  இதனால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவோடு இருந்த இலங்கையின் சிங்களர்கள் மீது இந்திய ஆரியப் பிராமணர்களுக்கு இயல்பான பாசம் இருப்பது இயல்பு.  இந்த இயல்பின்படி இலங்கையின் சிங்களர்களுக்கு இந்தியப் பிராமணர்களின் இயல்பான பாசமும் அரவணைப்பும் கிடைத்து, இலங்கையில் தமிழ் இன அழிப்பு இயல்பாக நிறைவேறியது. 

இலங்கையில் தமிழ் இன அழிப்பை எதிர்த்து நின்ற விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழித்து விட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த போது, இந்தியா உட்பட்ட உலக நாடுகளை நோக்கி இலங்கைத் தமிழர்கள்,

“Long live human dignity
Shame on International Community…”
“While the so called International Community is exposed in its shameful conning…
Thousands of Tamil civilians and combatants are laying down their lives to uphold Tamil dignity and human dignity”
(The Hindu 19.05.09)

என்னும் கருத்தை உலக நாடுகளை நோக்கி வெளியிட்டது ஏன்? என்னும் கேள்வி எழுகின்றது.

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய "அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?" என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)  
PDF இல் சேமிக்க‌

1 கருத்துகள்:

THAMIZHMARAVAN said...

இந்திய பார்ப்பன மலையாளிகலும்.வங்க ,தமிழக பார்ப்பனர்களும்,,,,,,

Post a Comment