12.2.11

ஆரிய நிறவெறிக்கு அடிமைப்பட்ட கிறித்தவம்


நிறவெறிக்குத் துணை
ஐரோப்பியர்கள் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்களாயிற்றே!  இப்படியெல்லாம் (இலங்கையில் தமிழ் இன அழிப்புக்கு இந்தோ ஐரோப்பியர்களின் தலைவர்களாகிய பிராமணர்களுக்குத் துணை போவார்களா?) செய்வார்களா? என்னும் கேள்விக்கு, கத்தோலிக்கக் கிறித்தவர்களின் தலைவராகிய போப்பாண்டவருக்கும் புரொடெசுடண்டு கிறித்தவர்களின் தலைவராகிய “ஆர்ச்சு பிசப்பு ஆப் காண்டர்பரி”க்கும் நம்மால் எழுதப்பட்ட கடிதங்களும் அவர்கள் நமக்கு எழுதிய விடைகளும் தக்க சான்றுகளாக அமைந்து விளங்குகின்றன.



இன அழிப்புக்குத் துணை
கிறித்தவ மதத்திற்குத் தலைமை தாங்கும் ஐரோப்பியர்கள், ஆசியாவின் கிறித்தவ மதத்தைத் தங்களுக்கு அடிமைப்படுத்தித் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்துகின்றவர்களே தவிர, கிறித்துவின் நல்ல போதனைக்காக வாழ்கிறவர்கள் அல்லர் என்பதையும் ஆரியப் பிராமணர்களின் நிறவெறியை ஆதரிக்கின்றவர்கள் என்பதையும் அவர்களின் விடைகளே நமக்கு விளக்கம் கொடுக்கும் சான்றுகளாக அமைந்துள்ளன.
 
உலகக் கிறித்தவ மதத்திற்குத் தலைமை தாங்கும் ஐரோப்பிய ஆன்மீகத் தலைவர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்பொழுது, ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நிலை எவ்வாறு இருக்கும்? என்பது எண்ணிப் பார்க்கத் தக்கது. 

ஐரோப்பியர்களின் பிடியில் ஐக்கிய நாடுகளின் சபை இருக்கிறது.  ஐக்கிய நாடுகளின் கட்டுக்கோப்பில் உலக நாடுகள் அடங்கி இருக்கின்றன.

இதனால் உலக நாடுகள் இலங்கையில் தமிழ் இன அழிப்பு நடைபெறும்பொழுது வேடிக்க பார்ப்பதைத் தவிர அவற்றிற்கு வேறு வழியில்லை.  இது ஓர் அவமானகரமான வெட்கப்பட வேண்டிய செயல் என்பதை
“While the so called International community is exposed in its shameful conning…”
என்னும் எழுத்துகள் வெளிப்படுத்துகின்றன. 

(பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய 'அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து சில திருத்தங்களுடன் பதியப்பட்டுள்ளது) 
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment