7.3.11

உலகம் முழுவதும் நடைபெறும் பயங்கரவாதத்திற்குத் தீர்வு என்ன? – 4


இராணுவம் இல்லாத அமைதிப் பூங்கா
உலக மக்களாட்சி வரும்போது, உலகில் உள்ள நாடுகள் அனைத்திற்கு இராணுவம் தேவையற்றதாக மாறிவிடும்.   உலகம் போர் இல்லாமல் அமைதிப் பூங்காவாக மாறுவதற்கு அது வழி வகுக்கும்.  மக்களுக்குச் செலவு செய்ய வேண்டிய பணம் போர் வீரர்களுக்கும் போர்த்தளவாடங்களுக்கும் வீணாவது மறையும்.

எடுத்துக் கூறப்போவது யார்?
அப்படியானால் போப்பாண்டவரையும் ஒபாமாவையும் சந்தித்து இவற்றை எடுத்துக் கூறி, அவர்கள் இதை நடைமுறைப்படுத்தத் துணையாகச் செயல்படப் போவது யார்? என்னும் கேள்வி எழுகின்றது.

இலங்கை
இலங்கையின் மண்ணின் மைந்தர்களாகிய சிறுபான்மைத் தமிழர்கள் பெரும்பான்மை சிங்களர்களால் அழிக்கப்பட்டனர். 

தமிழர்கள் திகைத்து நிற்கின்றனர்
இதை எதிர்த்து, தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, குரல் கொடுத்தும் இவர்களுடைய தீர்மானங்களும் இவர்களுடைய குரல்களும் ஆதிக்கவாதிகளிடம் எடுபடவில்லை.  இன அழிப்பு நிறைவேறியது.  உலக நீதிமன்றம் என்ற ஒன்று இல்லாமையால் இந்தியத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் செய்வது அறியாது திகைத்து நிற்கின்றனர்.

தமிழர்கள் பயங்கரவாதிகள் ஆகவில்லை.  ஏன்?
வேறு ஓர் இனம் இத்தகைய பாதிப்புக்கு உட்பட்டு இருக்குமானால் தற்கொலைப்படையாகச் செயல்படும் பயங்கரவாதிகள் மிகப்பெரிய அளவில் உருவாகி பெரிய அழிவுகள் நடைபெற்றிருக்கும்.  ஆனால் தமிழர்களோ தங்கள் தலையில் தாங்களே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தங்களை எரித்துக் கொண்டார்களே தவிர, மற்றவர்களை அழிக்கும் பயங்கரவாதிகளாகச் செயல்படவில்லை.

2001இல் அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டைக் கோபுர வீழ்ச்சிக்குப் பின்பு ஈழத் தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ‘பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்தப்பட்டமை நீதியாகாது என்பதை அனைவரும் அறிவர்.

தமிழர் வரலாற்று ஆன்மீகக் காரணம்
ஈழப்படுகொலையை எதிர்க்கும் தமிழ்நாட்டுத் தமிழ் இனம், தன்னைத் தானே தீயிட்டுக் கொளுத்திக் கொண்டதற்கு ஒரு வரலாற்று ஆன்மீகக் காரணம் இருக்கிறது. 

அந்த ஆன்மீகக் காரணம் என்ன?
                                                                                  - அடுத்த பதிவில் பார்ப்போம்.

(உலகத் தமிழர் ஆன்மவியல் இயக்க நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம் எழுதிய ‘அழிந்து கொண்டிருக்கும் தமிழ் இனத்தைப் பாதுகாப்பது எவ்வாறு?’ என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது.) 

PDF இல் சேமிக்க‌

2 கருத்துகள்:

Anonymous said...

வேறு ஓர் இனம் இத்தகைய பாதிப்புக்கு உட்பட்டு இருக்குமானால் தற்கொலைப்படையாகச் செயல்படும் பயங்கரவாதிகள் மிகப்பெரிய அளவில் உருவாகி பெரிய அழிவுகள் நடைபெற்றிருக்கும். ஆனால் தமிழர்களோ தங்கள் தலையில் தாங்களே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தங்களை எரித்துக் கொண்டார்களே தவிர, மற்றவர்களை அழிக்கும் பயங்கரவாதிகளாகச் செயல்படவில்லை.

நீங்கள் ஒன்றில் மறந்து விட்டீர்கள். அல்லது முன்பு நடந்தவை தெரியாது.
புலிகள் மிகப்பெரிய அளவில் தற்கொலை தாக்குதல் இலங்கையில் நடத்தி பல அழிவுகளை செய்தார்கள். அதன் காரணமாக பல நாடுகள் புலி இயக்கத்திற்க்கு தடை விதித்தன.

பகுத்தறிவு said...

தோழர்,
நாம் இங்கு பதிந்திருப்பது தமிழகத் தமிழர்களைப் பற்றித் தான்! ஈழத் தமிழர்களுடைய வாழ்க்கைச் சூழல் வேறு! தமிழகத் தமிழர்கள் வாழ்க்கைச் சூழல் வேறு! ஈழத்தைப் பற்றிப் பேசுவதாயின் தந்தை செல்வா காலத்தில் இருந்து இன்று வரை பேசுவது தான் முழுமை தரும்..

Post a Comment