20.1.11

சமற்கிருத வேதங்களின் கோட்பாடுகள் இந்து மதத்தின் கோட்பாடுகள் இல்லை


        ஆரியர்களுக்கென்று மதம் எதுவும் கிடையாது.  அவர்களுக்கென்று வழிபாடு தான் உண்டு.  அவர்கள் விலங்குகளைப் பலியிட்டு, அவற்றின் புலாலை உண்டு, சோம பானம் – சுரா பானம் என்னும் மதுவகைகளை உட்கொண்டு வந்தனர். 

            வேதங்கள் சமற்கிருதத்தில் உள்ளன.  முதல் சமற்கிருதக் கல்வெட்டே கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தான் காணப்படுகிறது.  (Nirad C. Chaudhuri, Hinduism, 1979 Pp. 38, 39 quot. By Dr. Alexander Harris, The development of Civilization and Religion in India and its influence on the world Society, 2001, Pp. 39-41).  எனவே வேதங்களின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட காலமாகும்.  (Dr. Alexander Harris, Ibid, http://www.geocities.com/appiusforum/book/pdf). 

            கிறித்துவிற்குப் பிற்பட்ட நூற்றாண்டுகளில் திராவிடரான வேதவியாசர் ஆரியரின் நாடோடி வழிபாட்டுப் பாடல்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்துத் தொகுத்தார்.  அவரே அவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி வேதங்களாகப் பிரித்தார்.

            வேதங்களைப் பொறுத்தவரை அவை மிகப் பழமையானவை என்றும் சைவம், வைணவம் ஆகிய மதங்கள் உருவாவதற்கு அடிப்படையாய் இருந்தன என்றும் பொதுவான ஒரு கருத்து நிலவி வருகிறது.
 
            சைவம், வைணவம் ஆகியவற்றின் அடிப்படைக் கோட்பாடுகள் வேதங்களில் காணப்படவில்லை.  சைவ சித்தாந்தத்தின் படி மனிதனாக அவதரித்து, மனுக்குலத்தை மீட்பதற்காகப் பாடுபட்ட முழு முதல் அன்புக்கடவுள் தான் சிவன் ஆவார்.  ஆனால் வேதங்களில் காணப்படும் உருத்திரன் சிறு தெய்வங்களில் ஒருவரும் புயல்காற்றின் தெய்வமும் ஆவார்.  புயல் தெய்வமான உருத்திரனுக்கும் சிவனுக்கும் எத்தொடர்பும் இல்லை.
 
            இதைப் போல் வைணவத்தில் காணப்படும் விட்ணுவிற்கும் வேதங்களில் கூறப்படும் விட்ணுவிற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.  வேதத்தில் உள்ள விட்ணு என்பது கடவுளால் படைக்கப்பட்ட பொருள்களில் ஒன்றான சூரியனைக் குறிக்கிறது.  ஆனால் வைணவத்தின் விட்ணு முழு முதல் கடவுளாவார்.  வேதங்களில் காணப்படும் உருத்திரன், விட்ணு ஆகிய இருவரும் சிறு தெய்வங்களே அன்றி முழு முதல் கடவுளர் அல்லர். 



(முனைவர் தெ. தேவகலாவின் 'இந்தியா தோமா வழி திராவிடக் கிறித்தவ நாடே... எவ்வாறு?' என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)

PDF இல் சேமிக்க‌

1 கருத்துகள்:

gvsivam said...

http://archakarkural.forumta.net/t78-topic#128

Post a Comment