"தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்" என்னும் கோணத்தில் எங்களைச் சிந்திக்கத் தூண்டியது இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பு ஆகும். இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பை, தாய்த் தமிழக மக்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. காரணம் தமிழ் இனத்திற்காக உருகுவதாக நடித்த அந்நியர்களின் தலைமையில் ஒன்றிணைந்த தமிழக அரசியல் கட்சிகள் ஆகும். பதவி விலகுவதாக அறிவித்தபடி யாரும் பதவி விலகவில்லை. இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டமைக்குக் காரணம் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் நடிப்பு என்பதை உலகம் அறிந்தது."
நீங்கள் தன்மானத் தமிழரா?
இந்தியா 1947இல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை. இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.
இந்தியா 1947இல் வெள்ளையரிடமிருந்து விடுதலையடைந்தது; வெள்ளையர் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர். இந்தியா மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில மொழியினர் அந்தந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றனர். இது நடைமுறை. இதனால் இந்திய இறையாண்மை என்பது மத்திய அமைச்சரவையும் மாநில அமைச்சரவைகளும் இணைந்த ஒன்றாக இருக்கிறது.
'இந்தியாவை
இந்தியர்களே ஆள வேண்டும்’
என்பதும்
'தமிழ் நாட்டைத்
தமிழர்களே ஆள வேண்டும்’
என்பதும்
இந்திய இறையாண்மை
தமிழ் இனத்திற்குக் கொடுத்துள்ள உரிமையாகும். இந்த நிலையில் ''தமிழ் நாட்டைத் தமிழர்களே
ஆள வேண்டும்” என்னும் கோரிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனக் குரல் எழுப்புகிறவர்கள்
தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாத, தமிழர்க்கு எதிரான அந்நியர்கள் ஆவர்.
இந்தியாவை வெள்ளையர்
ஆளுவதற்கு முன்னர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து வந்த தமிழரல்லாத அந்நியர்கள், தமிழ்
நாட்டில் பெற்ற அனைத்து வசதிகளுடன் நிரந்தரமாகத் தங்கியுள்ளனர்.
இந்தியா விடுதலையடைந்தவுடன்
வெள்ளையராகிய வெளிநாட்டினரை இந்தியாவை விட்டு வெளியேற்றி விட்டோம். ஆனால், தமிழ் நாட்டின்
மீது படை எடுத்து வந்து, தமிழ் இனத்தை அடக்கி, நசுக்கி, இழிவுபடுத்தி ஆண்ட தமிழரல்லாத
அந்நியர் வெளியேற்றப்படவில்லை. இதனால், தமிழரல்லாத அந்நியர் தமிழ் நாட்டை ஆளும் நிலை
உருவாகியுள்ளது. மேலும், தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்று கோருவது இந்திய இறையாண்மைக்கு
எதிரானது என்பது போன்ற மாயத் தோற்றத்தை இந்த அந்நியர்கள் உருவாக்கி வருகின்றனர்.
இந்தியாவின்
மருமகளாகிய சோனியாகாந்தி இந்தியப் பிரதமராக ஆகும்படித் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவை
ஆள முற்பட்டபொழுது, 'வெளிநாட்டைச் சேர்ந்தவர் இந்தியாவை ஆளக் கூடாது; இந்தியாவை இந்தியரே
ஆள வேண்டும்’ என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது. அப்பொழுது, சோனியாகாந்தி கட்சிக்குத்
தலைமை தாங்கிக் கொண்டு, ஆட்சித் தலைமைக்கு ஓர் இந்தியருக்கு இடம் கொடுத்தார். அதைப்
போன்று, தமிழ் நாட்டில் வாழும் தமிழரல்லாதார் தமிழரை ஆள விரும்பாமல், அவருடைய கட்சியைச்
சேர்ந்த தமிழரை ஆட்சியில் அமர்த்திவிட்டு, கட்சிக்குத் தலைமை தாங்கவேண்டும். இதை விரும்பாதவர்,
தமிழ் இனத்தை அடிமைப்படுத்தி அழிக்க விரும்பும் அந்நியர் ஆவார் என்பதில் ஐயம் இல்லை.
தன்மானத் தமிழர்கள் அத்தகைய கட்சியில் இருக்கமாட்டார்கள்.
இந்தியா பல
மொழி பேசும் மாநிலங்களாக இருக்கின்ற காரணத்தால், மற்ற மாநிலங்களில் தமிழர் அமைச்சராக்கப்பட்டிருந்தால்,
அந்த மாநிலத்தவர் இங்கும், அங்குள்ள எண்ணிக்கைக்கேற்ப அமைச்சராக்கப்படலாம். தமிழ்நாட்டில்
இந்த நிலை இதுவரை எண்ணிப்பார்க்கப்படவில்லை. இதன் காரணமாகவே
தமிழ் இனம்
அந்நியர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. அழிந்து கொண்டிருக்கும்
தமிழ் இனம்-தமிழ்
மொழி-தமிழர் பண்பாடு-தமிழர் சமயம்
அழிக்கப்படாமல்
பாதுகாக்கப்பட, தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோரிக்கை இந்தக் காலத்தில்
எழுப்பப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இதனால் தமிழர் அல்லாதவர் தமிழ் இனத்தை
ஆளுவது தமிழ் இனத்திற்கு இழிவு ஆவதுடன், அழிவையும் கொடுப்பது ஆகும்.
'இந்தியாவை
இந்தியரே ஆள வேண்டும்’
என்பதும், அதைப்
போன்று
'தமிழ் நாட்டைத்
தமிழரே ஆளவேண்டும்’
என்பதும்,
நியாயமானதும்
இந்திய இறையாண்மைக்கு ஏற்றதும் தமிழர்களின் அடிப்படை உரிமையுமாகும்.
இதைக் குறை
கூறுவோர் தமிழ் இனத்தை அடக்கி ஆள விரும்பும் அந்நியரும் அந்நியர்களின் கைக் கூலிகளுமேயாவர்.
இதனால் தமிழ் இனத்தை அடக்கி, இழிவுபடுத்தி, அழிக்க விரும்பும் அந்நியர்களிடமிருந்து
தமிழ் நாட்டை விடுவிக்க வேண்டிய பிறவிக் கடமை தமிழ் இனத்தில் பிறந்துள்ள தன்மானத் தமிழர்
ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இது இந்திய இறையாண்மை தமிழ் இன மக்களுக்குக் கொடுத்துள்ள
உரிமையாகும். இதனால் கட்சிக்குத் தலைமை தாங்குவதுடன் ஆட்சிக்கும் தலைமை தாங்க விரும்பும்
அந்நியர்களின் தலைமையிலுள்ள கட்சிகளில் தன்மானத்
தமிழர் இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம்.
போராட்ட வரலாறு
இந்தக் கோணத்தில்
எங்களைச் சிந்திக்கத் தூண்டியது இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பு ஆகும். இலங்கையில்
நடந்த தமிழ் இன அழிப்பை, தாய்த் தமிழக மக்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை. காரணம்
தமிழ் இனத்திற்காக உருகுவதாக நடித்த அந்நியர்களின் தலைமையில் ஒன்றிணைந்த தமிழக அரசியல்
கட்சிகள் ஆகும். பதவி விலகுவதாக அறிவித்தபடி யாரும் பதவி விலகவில்லை. இலங்கையில் தமிழ்
இனம் அழிக்கப்பட்டமைக்குக் காரணம் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழக அரசியல் கட்சிகளின்
நடிப்பு என்பதை உலகம் அறிந்தது.
இந்த நிலையில்
அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு தன்னால் இயன்றதைச் செய்ய எண்ணியது.
1. முதலாவதாக, 2011 சட்டமன்றத் தேர்தலின் போது 234
வேட்பாளர்களில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து, எங்களைப் போன்றே கைதான
46 வேட்பாளர்களுக்காக, அவர்களுடைய கட்சி, அணி இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் 7 பேர் கொண்ட ஆன்மீக அணி தமிழ் நாடு முழுவதும் பயணமாகி
தேர்தல் பரப்புரையை நிகழ்த்தியது.
2. இரண்டாவதாக, வாக்களிப்பு முடிந்து, தேர்தல் முடிவுகள்
வெளிவருவதற்கு முன்னர் 30-4-2011 அன்று ''தமிழ்நாட்டைத் தமிழரே ஆளவேண்டும்” என்னும்
தலைப்பில் நீதிமன்ற ஆணையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
3. மூன்றாவதாக, கடிதங்களின் வழி நாம் விடுத்த வேண்டுகோளை
ஏற்றுக் கொள்ளாமல் தமிழ்நாட்டின் முதல்வராக தமிழரல்லாதவர் 16-5-2011இல் பதவி ஏற்ற போது,
தம்முடைய துக்கத்தை வெளிப்படுத்தும் தமிழர் சமய மௌனப் பிரார்த்தனை ஊர்வலம் நடத்த முயன்று
கைது செய்யப்பட்டது.
4. நான்காவதாக, 16.6.2011 அன்று காவல்துறையின் அனுமதியுடன்,
தமிழ் நாட்டைத் தமிழரே ஆள, எல்லாம் வல்ல இறைவனை நோக்கி, தமிழர் சமய - பிரார்த்தனை - போராட்டம் நடத்தப்பட்டது.
5. 2011 ஜூலை 16 சனிக்கிழமை பகல் 12 முதல் 1 மணி வரை தமிழர் சமய-பிரார்த்தனை-போராட்டம் சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு அருகில் நடைபெறுகிறது.
தமிழக முதல்வராக தமிழர் ஒருவர் பதவி ஏற்கும் வரை ஒவ்வொரு மாதமும் அந்நியர் பதவி ஏற்ற 16ஆம் தேதி பகல் 12 முதல் 1 மணி வரை நம்முடைய தமிழர் சமய - பிரார்த்தனை போராட்டம் நடத்தப்படும். போராட்டத்தில் பங்கு கொள்ள விரும்பும் தன்மானத் தமிழர் தொடர்பு கொள்ள வேண்டுகின்றோம். முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே பிரார்த்தனையில் பங்கு பெறுகின்றார்கள். இது பிரார்த்தனை - போராட்டம் அமைதியாக ஆன்மீக நிலையில் நடைபெறத் துணை புரிகிறது.
நீங்கள் தன்மானத் தமிழரா?
தொடர்பு முகவரி:
பேராசிரியர்
முனைவர் மு, தெய்வநாயகம்
ஒருங்கிணைப்பாளர்,
அனைத்துத் தன்மானத்
தமிழர்களின் கூட்டமைப்பு,
278, கொன்னூர்
நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை-23.
04426743842;
9840003842 ; 9444817394
1 கருத்துகள்:
தமிழின மீட்சிக்கு தாங்கள் மேற்கொண்டுள்ள பணி போற்றத்தக்கது. அதற்காக நானும் வேண்டுகிறேன்.
Post a Comment