குறிப்பு: பின்னூட்டமிடுவோர் இத்தொடரின் முதல் நான்கு பதிவுகளையும் படித்து விட்டுப் பின்னூட்டமிடுங்கள். தொடர் இன்னும் விரியும்..
சைவ வைணவ சமயங்கள்
என்பன இரண்டு தனித்தனிச் சமயங்கள் அல்ல. சைவத்தின்
கிளையே வைணவம் ஆகும். அன்பின் மறுபெயர் ‘சிவன்’
என்பதாகும். சைவம் என்பது சிவனை அடிப்படையாகக்
கொண்டது. சிவபெருமானின் உடலின் இடப்பாகத்தைப்
பெண்ணாகக் கூறினால் அது சைவம். அதையே ஆணாக
கூறினால் அது வைணவம்.
கிறித்தவத்தில்,
தந்தை, மகன், பரிசுத்த ஆவி என்ற மூவொரு கடவுள் கோட்பாட்டில், பரிசுத்த ஆவியைப் பெண்ணாகக்
கொண்டு சைவம் பிறந்தது; பரிசுத்த ஆவியை ஆணாகக்
கொண்டு வைணவம் பிறந்தது. இதைப் பற்றி மேலும்
விளக்கம் வேண்டுவோர் “விவிலியம் திருக்குறள் சைவ சித்தாந்தம் ஒப்பாய்வு” என்னும் ஆய்வு
நூலை நோக்குக.
பலிபீடம் |
பைபிளில் யாக்கோபு
நாட்டிய நினைவுத்தூண், சைவத்தில் சிவலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. கிறித்துவிற்கு முற்பட்டது சிவலிங்க வழிபாடு. கிறித்துவிற்கு முற்பட்ட சிவலிங்க வழிபாட்டில்
பலி இருந்தது. யாக்கோபு பலியிட்டான். கிறித்துவிற்குப் பிற்பட்டது சிவக்குடும்ப வழிபாடு. சிவக்குடும்ப வழிபாட்டில் பலிபீடம் இருக்கிறது. ஆனால் பலி இல்லை. காரணம் பலி இயேசு கிறித்துவினால் நிறைவேற்றப்பட்டு
விட்டது என்பதாலேயேயாகும்.
தந்தை, பரிசுத்த
ஆவி, மகன் ஆகிய “மூவொரு கடவுள்” என்னும் கிறித்தவ இறையியல் கொள்கை,
1.
திருக்குறளில்
கடவுள், வான், நீத்தார் ஆகிய “இயல்புடைய மூவர்” என்றும்
சோமாஸ்கந்தர் |
2.
சிவக்குடும்ப
வழிபாட்டின் ஒரு பிரிவாகிய சைவத்தில் அப்பன், அம்மை, மகன் ஆகிய “சோமாஸ்கந்தர்” என்றும்
மும்மூர்த்தி |
3.
சிவக்
குடும்ப வழிபாட்டின் மற்றொரு பிரிவாகிய வைணவத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய “மும்மூர்த்தி”
என்றும்
குறிக்கப்படுகின்றது. சைவம், வைணவம் ஆகிய இரண்டிலும் நெற்றியில் அடையாளம்
இடும் மரபு இருந்து வருகிறது.
- தொடரும்
(உலகத் தமிழர்
ஆன்மவியல் இயக்க நிறுவனர் பேராசிரியர் முனைவர் மு.தெய்வநாயகம் எழுதிய “திருநீறா? சிலுவையா?”
என்னும் நூலில் இருந்து பதியப்பட்டுள்ளது)
2 கருத்துகள்:
திருநீறா? சிலுவையா?
click the links and read.
>>> இந்து மதம் எங்கே போகிறது?
>>> பைபிளில் உள்ளவை.
.
@DRAVIDANதோழர் திராவிடன், இங்கே ஆத்திகர்கள் பெரும்பான்மையானோர் மதங்களை நம்பிக்கொண்டு கடவுளை நம்புவதாக நினைத்துக் கொள்கின்றனர். நாத்திகர்கள் பெரும்பாலானோர் மதங்களை எதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு கடவுளை எதிர்த்து நிற்கின்றனர். கடவுள் மதங்களைக் கடந்தவர் என்னும் உண்மையை மக்களிடத்தில் கொண்டு சென்று மக்களை மதங்களைக் கடந்து வரவழைக்கும் வைக்கும் சிறு முயற்சியே இது!
Post a Comment