27.5.11

அரசியல் கட்சிகளுக்குக் கடிதம் - 1

கலைஞர் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும்
அனுப்பபப்பட்ட முதல் கடிதம்


தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் வழிபாடு, தமிழர் சமயம் முதலியன பற்றித் தமிழ் மக்களின் உள்ளங்களில் புகுத்தப்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை நீக்குகின்ற தமிழ் இன விடுதலைக்கான - சாதி, மதம், கட்சி, ஆத்திகம், நாத்திகம் முதலிய அனைத்துப் பிரிவுகளையும் கடந்த  
அனைத்துத் தன்மானத் தமிழர்களின்கூட்டமைப்பு

ஒருங்கிணைப்பாளர்,
பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் M.A., Ph.D., நாள் : 21-04-2011

பதிவு அஞ்சல் அனுப்பப்பட்டு கட்சித்தலைவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

பெறுநர்

தமிழ் இனத்தின் மீது அக்கறை கொண்டு தமிழ் இனத்தின் நலன் கருதிச் செயல்படுவதாக நம்பப்படும்
தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும்

டாக்டர். கலைஞர் அவர்கள்,
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா அறிவாலயம்,
அண்ணா சாலை, சென்னை-600 018.

அன்பின் ஐயா,

வணக்கம்.

தமிழ் இனப் பகைவர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுகின்ற தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் சமயம் பாதுகாக்கப்பட

''தமிழ் நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்”

என்பதை இந்திய இறையாண்மைக்கு ஊறு ஏற்படா வண்ணம் வலியுறுத்தி 30-04-2011இல் நடத்தப்பட இருக்கும் எங்கள் ஆர்ப்பாட்டம் குறித்த துண்டு வெளியீடு ஒன்று இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

தாங்கள் தயவு கூர்ந்து இத்துண்டு வெளியீட்டின் கருத்துகளை ஆழ்ந்து நோக்கி, தமிழ் நாட்டிற்குச் சொந்தமானவர்களும், தமிழ் நாட்டில் மிகப் பெரும்பான்மையாக வாழுகின்றவர்களுமாகிய தமிழ் இனத்தினரின் நலன் கருதித் தங்கள் கட்சி செயல்படும் தன்மையை நாங்கள் புரிந்து கொள்ளுவதற்கு வாய்ப்பாக, எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு உங்கள் ஆதரவை எங்களுக்குத் தெரிவிக்க உங்களை அன்புடன் வேண்டுகின்றோம்.

ஆதரவுக் கடிதங்கள் ஆர்ப்பாட்டத்தின்பொழுது வாசித்துக் காண்பிக்கப்படும்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உங்கள் கட்சி ஆதரவு தெரிவிக்க இயலா நிலை இருக்குமானால் அதற்கான காரணங்களை நாங்கள் அறிந்து அதற்கேற்ப எங்கள் செயல் திட்டங்களை நாங்கள் வகுத்துக் கொள்ள எங்களுக்குத் துணை புரிய உங்களை அன்புடன் வேண்டுகின்றோம். ஒன்று எங்களுக்கு எழுதலாம் அல்லது எங்களுடன் கலந்து பேசலாம்.எவ்விதப் பதிலும் எழுதாமல் அமைதியாயிருக்கும் கட்சிகள், தமிழ் இனத்திற்கு எதிரான நிலைப்பாட்டையுடையவை அவை என்பதை விளக்குவதாக அமையும் என்பது வெளிப்படை.

நன்றி.

தங்கள் அன்புள்ள,

(மு. தெய்வநாயகம்)

ஒருங்கிணைப்பாளர்.

இணைப்பு: 1. ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டு அறிக்கை

2. தேர்தல் பரப்புரைக்கான துண்டு அறிக்கை

278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம், சென்னை - 600 023. +9144-26743842; 9444817394; 9840003842 மின்னஞ்சல்: ­ tamilarsamayam2010@gmail.com
PDF இல் சேமிக்க‌

0 கருத்துகள்:

Post a Comment